பக்கங்கள்

புதன், 25 மே, 2011

என் பார்வையில் மரங்களில் வர்ணக் கோலங்கள்


















மரங்களினால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள்(படங்கள் இணைப்பு) மரங்களில் வடிவமைக்கபட்ட சிற்பங்களின் அழகையும் வடிவமைப்பை நீங்களும் பாருங்கள்.

ஞாயிறு, 8 மே, 2011

என் பார்வையில் அன்னையர் தினம்



ன்னையாய் தன் உருவம் எடுத்து
ராரோ சொல்லி எமை வளர்த்து -உளம் குளிர்ந்து தன்
ரு தோலில் கை தாங்கி எமை சுமந்து
நாட்டின் பெருமைகளை கதைகளாய் கோர்த்து எமக்கு
வகை கொண்டு எம்மை வளர்த்து எடுத்த தாயவளை
ராரும் உலகோரும் கைகொட்டி சிரிக்கும் படி - தனிமரமாய் தவிக்கவிட்டு
ல்லோர் முன்னாலும் தாய் மீது பாசமென நாடகமும் ஆடிவிட்டு
ளனமாய் நடக்கும் கூட்டம் தான் குத்தாட்டம் இங்கு போடுகுதாம் - இதை
ங்கரா நீ சொல்லு எப்போது மாறும் இந்த மானிடனின் ஆட்டம்
ருநாள் நீயும் தாய் மனதில் இடம் கொண்டாய் மாம்பழமும் வாங்கிக் கொண்டாய்
ர் வார்த்தை சொல்லிவிடு கலியுகம் வாழும் மானிடர்க்கு தாயினை நீ ஒருநாளில் நேசிப்பதா அன்னையர் தினம் - உனக்கு அவையெல்லாம் வெறும் நகைச்சுவை போல் உனக்கு நாள் பார்த்து தாய் மீது பாசம் கொள்ள இதுவெல்லாம் நீ விரும்பும் ஒரு பொருள் அல்ல , உன்னை பாரினிலே புதுப் பிறவியாய் உருவம் கொடுத்த தெய்வமாய் தினம் போற்று அதுவே நீ உன் தாய்க்கு செய்யும் உண்மை அன்பு

செவ்வாய், 8 மார்ச், 2011

என் பார்வையில் பெண்கள் தினம்


ஒரு தாயின் கருவில் பெண் உரு கொண்டு வளர் நடைபோட்டு
மீண்டும் தாயாய் புணர் ஜென்மம் எடுத்து தன் வடிவத்தை
மறு ஓவியம் வரைந்தது போல தானும் ஒரு பெண் மகவை
தலைமுறை தலைமுறையாய் தாய் உருவம் கொள்வாள்

எனக்குள் பெண் என்பவளை பொன்னாய் மதித்திட வேண்டும்
புதுப் பண்போட்டு புது ராகம் இசைத்திட வேண்டும்
கால் படும் மண்ணாய் மதித்திடல் வேண்டாம் - அவள் மனம்
புண்ணாய் மாறிட செய்திடல் வேண்டாம் .

புரட்சி கண்ட பாரதியின் புரட்சி பெண்ணாக அவள் மாற
புரட்சி செய்து அவளை உயர்த்திட வேண்டும் -தினம்
வறட்டு மனதுடன் நான் தான் என்று குருட்டு பார்வை வேண்டாம்
சிட்டு குருவியாய் அவள் சுதந்திரத்தை மாற்றிடுவோம் .

அடுப்படியில் பெண்கள் எல்லாம் இருந்த நாட்கள் மாறி
அரசியல்படியில் பெண்கள் விரைந்து ஏறிடச் செய்வோம்
ஆண் தான் எல்லாம் என்ற ஒரு நிலையை மாற்றி
சமநிலையை பேண சரிநிகர் எனும் கோசம் கொள்வோம்


தயா

திங்கள், 14 பிப்ரவரி, 2011

என்பார்வையில் காதலர் தினம்



இருமனம் சேர துடிக்கிறது இதுவே திருமணமாம் பலர் வாழ்வில்
இருமனங்கள் சேராது துடிக்கிறதாம் வெறுமனமாய் .............
இரு
உள்ளங்கள் புரியாது காதல் செய்து புரியாத உறவு கொண்டு
காதலர் தினம் அன்றே பிரிவது தான் இன்றைய காதலர் தினமாம்

லைலா
மஜ்னு ,சாஜஹான் மும்தாஜ் ,கண்ணகி கோவலன் இவர்கள்
அன்றைய காதலர்கள்... நிஜமான ஜோடிகள்...
இவர்கள்
கொண்டாட வில்லை காதலர் தினம்
ஏனென்றால் அவர்களின் இதயம் தம்முள்ளே புரிதல் கொண்டது ..
உண்மை
காதலை உதட்டிலே காண்பதா ? இல்லை
உள்
இதயத்தில்
காண வேண்டும் - அன்று அவர்கள்
கண்டார்கள்
காதலின்
புனிதம் நிலைத்து கொண்டது
இன்று இவர்கள் காண்பது இருட்டிலே காமம் கொண்டதாய் காதலர் தினம்

முதல்
சந்திப்பில் தான் இன்றைய காதலர்க்கு.,
அவர்கள் காதல் வாழ்வின் முடிவு வரை .....

! இளைய சமுதாயமே உன் வாழ்விலும் காதல் வேணுமா ?

செய்வோம்
காதல் பெண் மீது அல்ல ,
உன்னை படைத்த தாயின்மீது
அல்லது
தந்தை மீது,

இல்லையேல்
உன் சமூகம் மீது ,

கருகி
சோபை இழந்து நீ காணும் உன் தேசம் மீது ,

தெருவில்
பிச்சை எடுக்கும்
ஒன்றும் இல்லாத உன் போன்ற ஜீவன் மீது காதலித்து பார் ,,
உண்மை
காதல் எதுவென்று அன்றே உன்னில் புரியும்..


அடுத்த
தெரு சரோஜாவுக்கு உனது தாய் தந்தையின்
பணத்தை
செலவு செய்வதை விட்டுவிட்டு உன்
சம்பாத்தியத்தில்
ஒரு பைசாவாவது செலவளித்துப்பார் !
உன் உழைப்பின் வியர்வை துளிகள் தெரியும்!!

அந்த
பணத்தில் உன் தாய்க்கு ஒரு கர்ச்சிப்பாவது கொடுத்துப்பார் !
உன் மீது தாய் காதல் கொள்வாள் !!

தமிழனாய் பிறந்த நமக்கு ஆங்கில காதல் வேண்டாம்
காதலர் தினமும் வேண்டாம் அன்றைய நாளை
ஒரு
கல்லறை நாளாய் கொள்வோம் ஏனெனில்
காதல்கள் எல்லாம் அங்கே தான்
உறக்கம் கொள்கிறது

காதல்
கொள்வோம் காதல் கொள்வோம்

காமம்
கொள்ளோம் காமம் கொள்ளோம்

இன்றைய
நாளில் இருந்து உன்னுள் மாற்றம் கொள்

நாளைய
பொழுது உன்மீது காதல் கொள்ளும் ............



வியாழன், 10 பிப்ரவரி, 2011

என் தேசம் , என் தந்தை , என் தாய்
என் சகோதரர் , என் சொந்தம் , என் சுற்றம் - எல்லாமே
அன்று என் வாழ்வில் வசந்தம்

குருதி தோய்ந்த தேசத்தில் வாழ்ந்த எனக்கு
குளிர் உறையும் தேசத்தில் வாழும் போதுநடுக்கம்
ஆனாலும் என் தேசம் எனக்கென்றும் நேசம்

அன்றைய பொழுதையும் இன்றைய பொழுதையும்
நினைக்கும் போது மனதினில் என்றும் இறுக்கம்
உறக்கம் தொலைத்து உடல் வலித்து உயிராகிய
என் தேசத்தை தொலைத்து தேடுவதாய்
எனக்குள் ஒரு சோகம் ,,,,,

உரிமைக்காய் போராடுகின்றோம் என்று
சொன்னவர் எல்லாம் தமது
உரிமையையும் இழந்து பிறர் உரிமையையும்
பறித்து கொடுத்ததுவாய் இன்றைய நம் வாழ்வு ...,

உரிமையின் பெயரால் எல்லாவற்றையும் இழந்தோம்
என் வாழ்விலும் மூ பத்துடன் இரு ஆண்டுகள் இதுதான்
இனிவரும் அகவையில் அக மகிழ்வேன் என்றபடி
பிற தேசம் வாழும் என் தேச நேசத்தவைளை
கரம் பிடித்த ஓராண்டுடன் ஓடோடி அவள் கரம் பற்ற
ஆகாயப்பருந்தில் ஆனந்தமாய் பயணப்பட்டேன் ...

என்னை வழி அனுப்பிடவே என் உடன் பிறந்தவள் தன் மகனோடும்
சோதரன் தன் குடும்பமுமாய் வந்தென்னை விமான புரியிலே
நா தள தளக்க பேசாமடந்தை போலும் விழி இரண்டில்
முத்து துளிகளை சிந்தியபடி என் மாமா தான் ப்ளேன் ஏறி
தனக்கு ஒரு ப்ளேன் வாங்கி வருவார் என்ற நம்பிக்கையுடன்
கன்னத்திலே முத்தமிட்டு கைகாட்டி விழியோரம் பார்த்து நிற்க
கூடவந்த சுற்றங்களும் என் வாழ்வு சிறக்கும்படி அகமகிழ்ந்து
வழி அனுப்பி வைத்தனராம் - தம் விழி கரைத்து

லங்கா விமானத்திலே இருந்து இழந்த என் மனதை
இழைத்து இழைத்து தேடுகின்றேன் ...,
இலங்காபுரியை விட்டு இமயபுரியின் மேலாய்
இடம் தேடி அலைபவன் போல் இடரோடு என்பயணம் ..

மேலே பறக்க பறக்க என் இதயம் கீழ்
நோக்கியதாய் துடி துடித்தது
ஒருநாளில் என்பயணம் மறுதேசம் கண்டது
இடை இடையே என் உள்ளத்தில் etppadda காய கீறல்களும்
உள்ளத்தின் வடுக்களும் கண்நீரைப்போலதுமாய்
நதி மலை பள்ளத்தாக்குகளும் மாறி மாறி பூமிப்பந்தின்
வர்ண ஜாலங்களும் என் விழி விம்பத்தில் கருக்கொண்டது ..

மெது மெதுவாய் ஆகாயப்பேருந்து இரைதேடிய
பருந்தினை போல அசைந்தாடி இலண்டன் மாநகரின்
அழகினை அணைத்தபடி கீட்ருவை நோக்கி முத்தமிட்டது

தொடரும்

சனி, 2 அக்டோபர், 2010

மேகங்களின் மாயாஜாலம்





திரண்டு வந்த மேகங்கள் ஏற்படுத்திய அதிசய பெண் உருவம் - மேகங்களின் மாயாஜாலம் ( படங்கள் இணைப்பு )

இந்த வாரம் பிரிஸ்டலில் மேகங்கள் திரண்டு வந்த போது அவை ஆகாயத்தில் ஏற்படுத்திய உருவங்களை பிரிஸ்டலை சேர்ந்த நோலா ஹீர்சே என்ற பெண்மணி தன்னுடைய ஐபோனில் கிளிக் செய்துள்ளார்.

சூரியன் மறையும் மாலை வேளையில் பிரிஸ்டலில் நடந்து கொண்டிருந்த போது திடிரென உண்டான மேகங்கள் பார்ப்பதற்கு பெண்ணின் முகம் போன்று தனக்கு தெரிந்ததால் அதனை போனில் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார்.

மேலும் இந்த உருவத்தை ஐபோனில் பார்த்தபோது ஆவியின் உருவம் போன்று தனக்கு தோன்றியதாகவும் இந்த படத்தை தன் நண்பர்களிடம் காண்பித்த போது அவர்களும் மலைத்துப் போய் விட்டதாகவும் ஆச்சர்யத்துடன் கூறுகிறார் நோலா ஹீர்சே.

ஆனால் இவை ஒன்றும் புதிதல்ல அனைத்தும் இயற்கை ஒளியின் வித்தைகளே என்பதை வாசகர்களுக்குக் காட்ட ஆப்கானிஸ்தானில் தென்பட்ட நாய் போன்ற உருவமுள்ள மேகக் கூட்டங்களையும் அதன் ஒப்பீட்டுப் படத்தையும் இணைத்துள்ளோம்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஆல்பம் டிசைன் செய்யும் தளம் ஒரு அறிமுகம்

நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் ஒருதிருமண ஆல்பம் டிசைன் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுகின்றார்கள் தெரியுமா...? ஆனால் இந்த சாப்ட்வேர் நேரத்தை பெருமளவு குறைத்து நமக்கு வேலையை சுலபமாக்கி விடுகின்றது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யூட்டரில் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேல்புறம் கீழ்கண்ட வாறு இருக்கும்.
இதில் முதலில் உள்ள New (பச்சை நிற பெட்டி)கிளிக் செய்து உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை தேர்ந்தேடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் வலதுபுறம் உங்களுக்கு Girl.Baby.Love,Simulation,Dream,Magazine,Cloth,Frame & Other என கீழ்கண் டபெட்டிகள் இருக்கும் .இதில் தேவையானதை கிளிக் செய்யுங்கள்.
ஒவ்வொரு வகையிலும் குறைந்தது 30 டிசைன்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான டிசைன் மீது கர்சரால் கிளிக் செய்து டிசைனை தேர்வு செய்யுங்கள்.,இப்போழுது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.
இத்துடன் ஒரு சிறிய விண்டோவும் தோன்றும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ஒரு ஆல்பத்தில் மூன்று விண்டோகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம்.நாம் ஒவ்வோரு விண்டோவிற்கும் வெவ்வேறு படங்களை வைததுக்கொள்ளலாம்.மீண்டும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வெவ்வேறு படங்களான குருவி,பாலம்,அல்லி மலர் இணைத்துள்ளேன்.அதுபோல நீங்கள் எந்த விண்டோவில் படத்தை வைக்க விரும்புகின்றீர்களோ அந்த விண்டோவினை கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் சின்ன விண்டோவினை பாருங்கள்.அதிலும் உள்ள பச்சை பெட்டி(New)கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.படத்தின் ப்ரிவியு பாருங்கள். விண்டோவில் படம் நடுவில் இல்லாமல் சற்று முன்னும் பின்னுமாக உள்ளதா..? இப்போது மீண்டும் சின்ன விண்டோவில் உள்ள சிகப்பு கட்டத்தை நகர்ததுங்கள். இப்போது விண்டோவில் படம் நடுவில் வந்துவிடும்.இப்போது நியு (பச்சை பெட்டிக்கு)க்கு அடுத்து மூன்று பொம்மை படங்கள். இருக்கும். இது எதற்கு பயன் படுகின்றது என்றால் நாம் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவோ - பழைய காலத்து போட்டோவாகவோ - பென் சில புகைப்படமாகவோ மாற்றிக் கொள்ளலாம்.ஒவ்வொரு பொம்மைபடத்திற்கும் ஒவ்வோரு டிசைன் உருவாகும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
வெவ்வேறு டிசைனில்செய்த புகைப்படங்கள் கீழே:-






சரி ...ஆல்பம் தயார் செய்துவிட்டோம். இப்போது இதில் மொத்தமாக மாற்றவேண்டும்.மாறுதல்கள் செய்யவேண்டும்.மீண்டும் மேலே வாருங்கள்.கீழ்கண்ட விண்டோவினில் தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
படத்தை சேமிப்பதோ - கலர் மாற்றுவதோ - அ ளவுகளை மாற்றம் செய்வதோ - எதுவேண்டுமானாலும் செய்து இறுதியில் சேமித்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.ஒருமுறை பதிவினை படித்துப்பாருங்கள். பின்னர் இந்த சாப்ட்வேரை உபயோகித்துப்பாருங்கள். சந்தேகம் வரும் பட்சத்தில் மீண்டும் இந்த பதிவினை படியுங்கள்.அப்படியும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் கருத்துரையில் கேளுங்கள்.பதில் அளிக்கி்ன்றேன்.

நன்றி
வேலன் அண்ணா

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தேர் உற்சவம் -இருபத்திமூன்றாம் திருவிழா


பாகம் ஒன்று


பாகம் இரண்டு


பாகம் மூன்று
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக வரலாறு காணாத பக்தர் வெள்ளத்தில் தேர் ஏறி பவனி வந்தான் நல்லூர்க் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராகத் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோஹரா கோஷம் ஒலிக்க காலை 7.15 மணிக்கு தேருலா ஆரம்பமானது.
கடந்த காலங்களை விட மிகக் கூடுதலான மக்கள் இம்முறை தேர்த்திருவிழவில் கலந்துகொண்டனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர்வரை நேற்றைய உற்சவத்தில் கலந்துகொண்டனர் எனத் தெரிகின்றது.
எனினும், வழமையான உற்சவ தினங்களில் கலந்துகொண்ட அளவுக்கு இம்முறை தேரின்போது மிகவும் கூடுதலான தென்பகுதி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும் நேற்றைய தேர்த்திருவிழாவின்போது மிகவும் குறைந்த மக்களே தென்பகுதியில் இருந்து கலந்துகொண்டனர். புலம் பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்களையும் காணக்கூடியதாக இருந்தது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தொண்டர்களும் சுறுசுறுப்பாக இயங்கியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தொலைக்காட்சிகளின் நேரடி அஞ்சல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுகாதாரம் , குடிதண்ணீர் வசதிகள் மாநகரசபையால் கண்காணிக்கப்பட்டதுடன் மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு உணவகங்களும் உட்படுத்தப்பட்டன.
தூக்குக்காவடி, காவடி மற்றும் அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் பக்தர்கள் அக்கறை கொண்டிருந்தனர். தேர் இருப்புக்கு வந்ததை அடுத்து பறவைக்காவடிகள் வந்தவண்ணம் இருந்தன

இருபத்திநான்காம் திருநாளில் சந்திப்போம்

புதன், 8 செப்டம்பர், 2010

இருபத்திரண்டாம் திருநாள் - சப்பறத்திருவிழா

இன்றைய சப்பரத்திருவிளாவிலும் தொடர்ந்து நடைபெற்ற தேர் மகொட்சவத்திலும் எனக்கும் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபடியால் பெரிதாக ஒன்றும் வழங்க முடியவில்லை . சப்பறத்திருவிளாவில் என்னால் எடுக்கப்பட்ட நிகழ்வின் ஒருசில நிமிட நிகழ்வின் தொகுப்பை வழங்கலாம் என்று உள்ளேன் .







இருபத்து மூன்றாம் நாளில் சந்திப்போம்

சனி, 4 செப்டம்பர், 2010

இருபத்தொராம் திருவிழா - வள்ளி திருமணம் -பகுதி -8


இன்றுடன் இந்த வள்ளி திருமணம் வில்லுப்பாட்டின் நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளோம் இன்று வரை என்னுடன் இந்த தொகுப்பில் ஒன்றினைந்த சகல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த தொகுப்பினை தந்து நல்கிய யூ டியுப் இணையத்துக்கும் அதனை தொகுத்தளித்த மீண்டும் எனது இந்த பகுதியில் இடம்பெறச்செய்த முன்னாள் தொகுப்பாளருக்கும் நன்றியுடனும் மேலும் இந்த வில்லுப்பாட்டின் நாயகன் ஐயா சோம காந்தா அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் இந்த நாள் வரை இதனை கண்டு களித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து எல்லா மக்களுக்கும் நல்லூர் கந்தனின் திருவருள் கிடைக்க வேண்டும் நாட்டில் இனியாவது சாந்தி சமாதனம் தொடர்ந்து நிலைப்பதொடு மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மருவி விடாமல் தொடர்ந்தும் இந்த ஈழ தேசத்தில் இதுபோன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுபோன்ற கலைகளை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்ற முறையில் எல்லோரும் இணைந்து இதனை ஒரு கடமை என்ற வடிவில் செயல்படுவோமாக .
நன்றியுடன்
தயா
இருபத்திரண்டாம்
திருநாளில் சந்திப்போம்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நல்லூர் மஞ்சம் -இருபதாம் திருவிழா - வள்ளி திருமணம் - பகுதி -7




கந்தன் மஞ்சக் கந்தனை நாம் தொழுதிட
அஞ்சாது பகைவரை எதிகொள்வோம் . பஞ்சென பகைவன் ஓடிச்சென்று முருகா எம்மை காப்பாற்று நாம் செய்த பிழையை பொறுத்திடு என்று தஞ்சம் கொள்வதை காண்பாய் தமிழா - திரு மஞ்சம் ஏறிடும் கந்தனை நம் நெஞ்சம் நிறைய தொழுதிடுவோம் .

இருபத்தொராம் நாளில் சந்திப்போம்