பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

நாலாந் திருவிழா - வள்ளியை மணம் பிடித்த வேலவா


நான் கண்ட நல்லஊரை நல்லூரில் தேடுகின்றேன் போர் ஓய்ந்து இன்று அமைதி நிலவும் வேளையிது எல்லோர் வாயும் இதைத்தான் உச்சரிக்கிறது ஆனாலும் நல்லூர் முருகனை கண்டவர்கள் தமிழராய் சிலரும் அல்லாதோர் பலராய்அல்லவா இன்று இருக்கிறது ஒரு காலத்தில்கதிர்காமமும் இப்படித்தான் இருந்ததாக எனது அம்மா அப்பா சொன்னது நினைவில் தோன்றுகிறது எல்லோருக்கும் விளங்கும் என்று நினைக்கிறேன் ஆனாலும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் நான் இந்த நேரத்தில் அரசியல் பேச வரவில்லை பக்திக்கு மதமும் இல்லை மொழியும் இல்லை என்றும் எங்கட அம்மா அப்பா சொன்னது நினைவில் உள்ளது அதற்காக அன்று அந்த கதிர்காம கந்தனை நாம் விட்டது போல மன்னிக்கவும் கந்தன் நம்மை விட்டானா இல்லாட்டி கயவர் நம்மை விடவில்லையா எல்லாம் இனி நம்மட கையில் தான் உள்ளது அந்த கந்தன் கையில் தான் உள்ளது கந்தா அருள் புரிவாய் நாலாம் நாளில் அடியவருக்கு காட்சி கொடுக்க ஓடி வருவாய் மால்மருகா இன்றைய நான்காம் நாள் திருவிழாவில் நமது ஈழம் தந்த கவிமகன் புதுவை இரத்தினதுரையின் கவி வரியில் உதித்த இந்த பாடலை பார்த்து மகிழுங்கள்
பாடியவர் எனது ஆசான் திரு . வர்ண ராமேஸ்வரன்
வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா
வேல் முருகா...அருள் தா முருகா....வேல் முருகா...அருள் தா முருகா........மால் மருகா....நல்லை வாழ் முருகா...மால் மருகா....நல்லை வாழ் முருகா...வா முருகா....துயர் தீர் முருகா........மால் மருகா....நல்லை வாழ் முருகா...
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா.......
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
(வேல் முருகா...அருள் தா முருகா....)
அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா
தமிழைப் பிறப்பித்த வேலவாவிழிகள் திறந்திட்டு ஓடிவாதமிழைப் பிறப்பித்த வேலவாவிழிகள் திறந்திட்டு ஓடிவா
வேலவா நீ ஓடிவாவேலவா நீ ஓடிவா
நன்றி
ஐந்தாந் திருவிழாவில் சந்திக்கிறேன்