பக்கங்கள்

புதன், 25 ஆகஸ்ட், 2010

பதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்


இன்றைய பதினோராம் திருநாளில் எனது ஆசான் மதிப்புக்குரிய திரு. வர்ண ராமேஸ்வரன் அவர்களின் கந்தன் பாடல் தொகுப்பில் இருந்து அண்ணன் கானா பிரபா அவர்களின் புளொக்கரில் இருந்து தொகுக்கப்பட்ட நல்லூர் உற்சவத்தின் ஒரு சில தொகுப்புக்களை மீண்டும் இடை செருகி உள்ளேன் . நல்லூர் கந்தனின் திருவிழாவினை நானும் எனது ப்ளொக்கரில் சேர்க்க வேண்டும் என்ற ஆவலுடன் விரும்பியபோது சகோதரன் கானா பிரபா அவர்களின் ப்லோக்கரை பார்க்க கிடைத்தது அதுவே இந்த விருப்பம் . அலங்கார கந்தனின் அருள் தமிழீழ மக்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் . மீண்டும் பிரபா அண்ணனுக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் சந்திக்கிறேன் .


"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் -
தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்.

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு.

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

பன்னிரண்டாம் திருநாளில் சந்திக்கிறேன்















பன்னிரண்டாம் திருநாளில் சந்திப்போம்
nanri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக