பக்கங்கள்

சனி, 28 ஆகஸ்ட், 2010

பதினான்காம் திருவிழா -வள்ளி திருமணம் - பகுதி 1

இன்றைய பதினான்காம் திருவிழாவில் இருந்து யாழ் . நல்லூர் ஸ்ரீ தேவி வில்லிசை குழுவினர் கனடாவின் சிவன் ஆலயத்தில் நடத்திய வில்லுப்பாட்டு நிகழ்வில் இருந்து முதலாவது பகுதியினை இன்றும் தொடர்ந்து ஏனைய பகுதிகளையும் ஒலி பரப்பலாம் என்று எண்ணியுள்ளேன் . பொதுவாக நம் தமிழ் மக்கள் ஆலயங்கள் மீதும் இறைவன் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள் . நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக தமது நாடு ,சொந்தம்,வீடு, கோயில் என்று அனைத்தையும் இழந்து தனிமையாய் வேறு தேசம் சென்றாலும் தமது கலாச்சாரத்தையோ அல்லது பண்பாடுகளையோ விட்டு செல்லாதவர்களாக இன்றும் அதனை பின்பற்ற வேண்டும் என்ற பற்று இன்று வரை காணப்படுவதாகவே உள்ளது. தமிழர்கள் என்றும் கலையினை செவ்வன போற்றுபவர்கள் . இதற்கு இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் உள்ளது. இது போன்ற பல நிகழ்வுகளை இன்றும் செம்மைப்படுத்தி வருகிறார்கள். எனக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்க என்றும் ஆசை உண்டு . இந்த நல்லூர் கந்தன் ஆலய நாட்களில் இந்த தொகுப்பினை செய்ய வேண்டும் என்ற ஆவலில் இதனை புகுத்தியுள்ளேன் . எல்லோருக்கும் எல்லாம் வல்ல அலங்காரக் கந்தனின் திருவுளம் கிடைக்க கந்தனை பிரார்த்திக்கிறேன் .




பதினைந்தாம் நாளில் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக